இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை
இலங்கைசெய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை

Share

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை

இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொடுப்பனவு நிலுவை நிலைமைகளின் முன்னேற்றம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி முதல் 286 Hs குறியீடுகள் தொடர்பான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தவுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய வங்கி வெளியிட்டுள்ள நம்பிக்கை | Import Restrictions Will Be Relaxed

இதற்கிடையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணி வரவின் மாற்று விகிதத்தில் அழுத்தங்களை ஏற்படுத்தாது என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் பணப்புழக்க நிலைமைகள் சமீபத்திய மாதங்களில் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

அரசாங்கப் பத்திரச் சந்தையில் நிகர வெளிநாட்டு முதலீட்டு வரவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

வரவு – செலவுத் திட்ட ஆதரவிற்காக பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் நிதியைப் பெற்றுள்ளது என்றும், இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் மேலதிக வரவுகள் எதிர்பார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

2022 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 2023 இல் சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 2023 இல் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா சுமார் 19 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

மேலும், உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளத.

மேலும் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதமாக 200 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...