tamilni 292 scaled
இலங்கைசெய்திகள்

இரட்டிப்பு விலையில் இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பில் விசாரணை

Share

இரட்டிப்பு பெறுமதியில் திரவ உரம் இறக்குமதி மூலம் சுமார் 71 கோடி ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்கும் தற்காலிக ஏற்பாடுகளில் ஒன்றாக திரவ உரம் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் நிறுவனம் ஒன்றில் இருந்து கேள்வி கோரல் இன்றி குறித்த திரவ உரம் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

வெறும் ஐந்து அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட திரவ உர போத்தல் ஒன்றுக்கு முதற்கட்டத்தில் 12. 5 டொலர்கள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 10 டொலர் வீதம் அரசாங்க நிதி செலவிடப்பட்டிருந்தது.

அதன் மூலம் உண்மையான சந்தைப் பெறுமதியை விட இரட்டிப்பு விலையில் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அரசாங்கத்தின் நிதியில் சுமார் 71 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் கமத் தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...