9 23
இலங்கைசெய்திகள்

குறைந்த விலைக்கு எரிபொருள்: முயற்சியில் இறங்கிய அரசாங்கம்

Share

குறைந்த விலைக்கு எரிபொருள்: முயற்சியில் இறங்கிய அரசாங்கம்

அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, குறித்த முயற்சியானது, மூன்றாம் தரப்பினர் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஏற்படும் கூடுதல் செலவுகளைச் சேமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் என்பது உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், அங்கு பொருளாதாரம் பெரும்பாலும் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டது.

அத்தோடு, உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளதுடன், ஒரு நாளைக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறார்கள்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வதுடன், அவற்றின் முக்கிய வாங்குபவர்களில் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...