இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு வெளியானது

22 10

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு வெளியானது

இலங்கை மத்திய வங்கியின் 05 ஆம் இலக்க நாணயக் கொள்கை விளக்கத்தை அறிவிக்கும் திகதி ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 05வது நிதிக் கொள்கை வர்ணனையின் அறிவிப்பு 20 செப்டம்பர் 2024 அன்று திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 290,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகள், எதிர்வரும் 18ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 2028ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 100,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும், 2029ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 150,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும், 2034 ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version