6 2
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தொடர்பில் ஐ.எம்.எப் விதித்துள்ள நிபந்தனை

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை மறுசீரமைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஏனைய, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய கூடுதல் முன்னேற்றங்களின் அவசியத்தையும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஏர்லைன்ஸின் செயல்பாட்டு நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதன் மரபுவழி கடனைத் தீர்ப்பதற்கும் ஒரு நடுத்தர கால மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பாதீட்டில், விமான நிறுவனத்தின் கடனில் சிலவற்றை அடைக்க 20 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க ஒரு நிதி ஆலோசகரையும் நியமித்துள்ளது.

ஆனால் இந்த நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வைப் பெற இவை வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கைக்கான செயல்பாட்டுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், அவற்றின் நிலுவையில் உள்ள மரபுவழிக் கடனைத் தீர்க்கவும் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசுக்கு சுமை இல்லாமல் அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதங்களிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்துதல், அந்நியச் செலாவணி கடன்களைத் தவிர்ப்பது மற்றும் அவற்றை மேலும் வெளிப்படைத்தன்மையாக்குதல் ஆகியவை, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...