6 2
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தொடர்பில் ஐ.எம்.எப் விதித்துள்ள நிபந்தனை

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை மறுசீரமைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஏனைய, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய கூடுதல் முன்னேற்றங்களின் அவசியத்தையும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஏர்லைன்ஸின் செயல்பாட்டு நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதன் மரபுவழி கடனைத் தீர்ப்பதற்கும் ஒரு நடுத்தர கால மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பாதீட்டில், விமான நிறுவனத்தின் கடனில் சிலவற்றை அடைக்க 20 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க ஒரு நிதி ஆலோசகரையும் நியமித்துள்ளது.

ஆனால் இந்த நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வைப் பெற இவை வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கைக்கான செயல்பாட்டுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், அவற்றின் நிலுவையில் உள்ள மரபுவழிக் கடனைத் தீர்க்கவும் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசுக்கு சுமை இல்லாமல் அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதங்களிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்துதல், அந்நியச் செலாவணி கடன்களைத் தவிர்ப்பது மற்றும் அவற்றை மேலும் வெளிப்படைத்தன்மையாக்குதல் ஆகியவை, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...