24 665d5609afe14
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கப்போகும் கடன் உதவி

Share

இலங்கைக்கு கிடைக்கப்போகும் கடன் உதவி

இலங்கைக்கான மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கவுள்ளது.

அன்றைய தினம் இலங்கையின் கடன் தவணையை அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது (Shehan Semasinghe) எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அமர்வில் இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைசச்ர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அனைத்து நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்றாவது கடன் தவணையாக இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ள கடன் தொகை 330 மில்லியன் டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...