tamilni 324 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

Share

சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமான சேகரிப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை கொண்டுள்ளது.

எனினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை இது தடம் புரளச் செய்ய வாய்ப்பில்லை என வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு வருட கடன் ஒப்பந்தத்தின் முதல் மறுஆய்வின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதியமைச்சராக இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்தனர்.

இந்த நிலையில் முதல் மதிப்பாய்வை நிறைவேற்றுவதற்குத் தேவையான பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றமும் இதில் அடங்கும் என்று இலங்கை அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதிய குழு, தமது இரண்டு வார பயணத்தின் முடிவில் இன்று (27.09.2023) புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....