இலங்கைசெய்திகள்

யாழ். சாவகச்சேரியில் பாரவூர்தியை வழிமறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்த செயல்

5 5
Share

யாழ். சாவகச்சேரியில் பாரவூர்தியை வழிமறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை வழிமறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் நேற்று (02.01.2025) இரவு 10.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் – மந்துவில் பிரதேசத்தில் இருந்து இருந்து பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேற்று (02.01.2025) இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்தபாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் ஏற்றிச்சென்றமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பாரவூர்தி சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த விடயம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர் இதற்கான அனுமதி பெறப்பட்ட பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த விடயம் குறித்து தாங்களும் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், தேவையான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...