2 47
இலங்கைசெய்திகள்

மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும்! எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி

Share

மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும்! எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை மாற்றி சஜித் பிரேமதாச அல்லது அனுர திஸாநாயக்க ஆகியோரில் யாரையேனும் ஜனாதிபதியாக தெரிவு செய்தால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்ய முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

18 நாடுகள், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்டனவற்றுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரமே எதிர்காலத்தில் செயற்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மட்டும் பேசி பயனில்லை, நாடுகளுடனும் பேச வேண்டியுள்ளது எனவும் நாடுகளுடன் பேசுவது சுலபமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைகளை திருத்தி அமைத்தால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...