பிரதமர் பதவி விலகாவிட்டால் நாம் விலகுவோம்! – அமைச்சர்கள் போர்க்கொடி

278885233 5009761925739309 4219216527967576000 n

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால், தாம் பதவி விலகுவோம் என நான்கு அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்துள்னர்.

நிதி அமைச்சர் அலி சப்ரி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊடகத்துறை அமைச்சர் நாலக கொடஹேவா மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் மஹிந்த பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தி அலரிமாளிகை நோக்கி சில அரசியல் பிரமுகர்கள் தற்போது படையெடுத்துவருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version