IMG 20230411 WA0067
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தோண்டி எடுக்கப்பட்ட விக்கிரகங்களுக்கு பூசை வழிபாடு!

Share
யாழ் மிருசுவில் மன்னன்குறிச்சியிலுள்ள வீட்டு வளவிலுள்ள நிலத்திலிருந்து 12 சிறிய விக்கிரகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம்அதிகாலை இந்த விக்கிரகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
 முத்தையா பாஸ்கரன் என்ற குடும்பத் தலைவர் தனது  வீட்டுளவில் விக்கிரகங்கள் உள்ளதாக கனவு கண்டுள்ளார்.
அதை அடுத்து அதிகாலை எழுந்து அவ்விடத்தை தோண்டிய போது பித்தளையிலான 12 சிறிய விக்கிரகங்களைக் கண்டுள்ளனர்.
சிவன் விக்கிரகம் ஒன்று, சிவலிங்கம் ஒன்று, வராகி அம்மன் விக்கிரகம் ஒன்று, ஆறுதலை முருகன் ஒன்று, சிவனும் பார்வதியும் இடப வாகனத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரகம் ஒன்று, ஒற்றைத்தலை நாகம் ஐந்து, ஐந்து தலை நாகம்  இரண்டு ஆகிய விக்கிரகங்களே மீட்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து அவ்விடத்தில் கொட்டில் அமைத்து விக்கிரகங்களை வைத்து வழிபட்டுவருகிறார்கள்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம்  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
IMG 20230411 WA0069 IMG 20230411 WA0070 IMG 20230411 WA0065 IMG 20230411 WA0068
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...