18 22
இலங்கைசெய்திகள்

நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு எதிர்பாரா பேரிடி

Share

நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு எதிர்பாரா பேரிடி

ஈரான் ஆதரவு ஹவுதிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) பதிலடி வழங்கியுள்ளது.

ஹவுதிகளுக்கு எதிராக யேமனில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் காட்சிகளை இராணுவம் வெளியிட்டுள்ளது.

14 இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் சுமார் 2,000 கிலோமீட்டர்கள் பறந்து, யேமனின் மேற்கு கடற்கரை மற்றும் தலைநகர் சனாவிற்கு அருகில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது 60 இற்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

மேலும், எரிபொருள் மற்றும் எண்ணெய் கிடங்குகள், இரண்டு மின் நிலையங்கள் மற்றும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் எட்டு இழுவை படகுகள் ஆகியவற்றையும் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது

இந்த நிலையில், குறித்த தாக்குதல்கள் ஹவுதிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும் அடி என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை, IDF ஆல் வெளியிடப்பட்ட காணொளிகளானது, தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளின் மத்தியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றைக் காட்டுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...

Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...