mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

பெரும்பான்மை இல்லாவிட்டால் விலகி விடுவேன்! – சந்தேகம் வேண்டாம் என்கின்றார் மஹிந்த

Share

“பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கம்தான் இருக்கின்றார்கள். பெரும்பான்மையினரின் ஆதரவு எனக்கு இருக்கும் வரை நான்தான் பிரதமர். நாடாளுமன்ற பெரும்பான்மையை நான் வைத்திருக்கும் வரை நான் இப்படித்தான் இருப்பேன். அது அரசமைப்பு ரீதியாக – சட்டரீதியாக எனக்கு உள்ள உரிமை. பெரும்பான்மை ஆதரவு எனக்கு இல்லாவிட்டால் நானாகவே விலகி விடுவேன்.”

– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நாளிதழ் ஒன்றுக்கு நேற்று மாலை அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

“நாடாளுமன்றப் பெரும்பான்மை எனக்கு இருக்கும் வரை என்னை யாரும் பிரதமர் பதவியில் இருந்து அகற்ற முடியாது. நாடாளுமன்றுக்கு வெளியில் போராட்டம் நடத்தும் மக்களின் குரல் – அவர்களது கோரிக்கை எனக்குக் கேட்கின்றது. அவை பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். ஒவ்வொரு அரசு வரும்போதும் மக்கள் போராட்டங்கள் நடக்கும். மக்கள் போராட்டங்களுக்காக அரசுகள் விலகுவது என்றால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது.

ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழமை. அவற்றின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. ஆனால், அதற்காக ஜனநாயக விரோத முறையில் அரசுகளைக் கலைக்க வேண்டும் என்பதல்ல.

2015 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்னரேயே, உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு விட்டேன். ஜனநாயகத்துக்கு முரணான வகையில் பதவியைப் பிடித்து வைத்திருக்கும் எண்ணம் எனக்குக் கிஞ்சித்தும் கிடையாது. ஆனால், இப்போது ஜனநாயக ரீதியில் பெரும்பான்மை என் பக்கம்தான் உள்ளது. ஆகவே, நான் பிரதமராகப் பதவியில் நீடிப்பேன். அது மக்கள் தீர்ப்பு.

சம்பந்தப்பட்டோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் எங்களோடு பேசலாம். பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகின்றேன்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...