பீ.பி.ஜயசுந்தர
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச சகோதரர்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளேன்! – பீ.பி.ஜயசுந்தர கவலை

Share

ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டபோதும் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தான் வாழ்நாளின் பெரும்பகுதியை ராஜபக்சக்களுக்காக உழைத்த போதிலும் ஒரு தொலைபேசி அழைப்புக்கூட அவர்களிடமிருந்து வருவதில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், உடனடியாக ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பீ.பி.ஜயசுந்தர நியமிக்கப்பட்டார்.

சில காலம் நிதி அமைச்சின் செயலாளராகவும் இருந்த அவர், ஏற்கனவே நாட்டில் சர்ச்சைக்குரிய நபராக இருந்தார். எனினும், 2 ஆண்டுகள் நிறைவடையும்போது பல பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டவர் இறுதியில் தனது பதவியை இராஜிநாமா செய்துகொண்டார்.

ஜனவரி மாதம் அவர் ஓய்வுபெற்றார். ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட ஜயசுந்தர, ஓய்வின் பின்னர் அனைவராலும் மறக்கப்பட்ட நபராக மாறியுள்ளார்.

இந்தநிலையில், அண்மையில் அரசின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்த அவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“நான் எனது 40 வருட சேவை காலத்தில் பெரும்பகுதி ராஜபக்சக்களுக்காக உழைத்துள்ளேன். ஆனால், நான் ஓய்வுபெற்ற பின்னர் எவரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

தொலைபேசி அழைப்பேற்படுத்தி எனக்கு நன்றி சொல்லவில்லை. ஒருவரும் என்னிடம் பேசவில்லை” என்று விரக்தியுடன் உயர் அதிகாரியிடம் அவர் கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...