அரசியல்இலங்கைசெய்திகள்

அழிவு ஏற்படும் என 2020இல் எச்சரித்திருந்தேன்! – சஜித் சுட்டிக்காட்டு

Share
sajith 5
Share

“இன்று நாடு வீழ்ச்சியடைந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த அழிவு ஏற்படும் என நான் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்தே நாட்டுக்கு வெளிப்படுத்தினேன்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சுதேச மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவரை நேற்றுக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துத் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே குபேரர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. இவ்வாறு வரிச்சலுகை பெற்ற செல்வந்தர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அது தொடர்பாக அதிசயமாகப் பேசினர்.

சுதேச மருத்துவமும் பாரம்பரிய மருத்துவமும் காலம் காலமாக நம் நாட்டில் மதிப்புமிக்க தொழிலாக இருந்து வருகின்றது.

இன்று உண்மை வென்று வருகின்றது. உண்மையை வென்றெடுப்பதற்கு மக்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளமை துரதிஷ்டவசமானது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...