22 61f789bc0576f
இலங்கைஅரசியல்செய்திகள்

மீண்டும் தூர்வாரப்படும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள்!!

Share

நாட்டில் மின்னுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினையடுத்து பழைய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் தூர்வாரப்படுகின்றன.

அந்த வகையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் உள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட வருவதாக மவுசாகலை நீர்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலை நாட்டில் உள்ள பெரும்பாலான குளங்கள் சுத்தப்படுத்தாததாலும் போதிய அளவு மழை வீழ்ச்சி கிடைக்காமலும் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக 25 சதவீதத்தால் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்வாக தற்போது இடைக்கிடையே மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் இருந்து நீரைக் கொண்டு செல்லும் சுரங்கப்பாதை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தேசியமின் கட்டமைப்பிற்கு 60 மெகா வாட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.

அத்துடன் கடந்த மாதங்களில் கனியோன் மின் உற்பத்தி நிலையத்தின் சுரங்கப்பாதையில் கோளாறு ஏற்பட்டால் அங்குள்ள இரண்டு டேபன்டயினர்கள் சேதமடைந்துள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .

இதற்காக தற்போது சுரங்கப்பாதையை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் மாறாக இது சீர்குலைக்கும் வேலை இல்லை எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...