22 61f789bc0576f
இலங்கைஅரசியல்செய்திகள்

மீண்டும் தூர்வாரப்படும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள்!!

Share

நாட்டில் மின்னுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினையடுத்து பழைய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் தூர்வாரப்படுகின்றன.

அந்த வகையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் உள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட வருவதாக மவுசாகலை நீர்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலை நாட்டில் உள்ள பெரும்பாலான குளங்கள் சுத்தப்படுத்தாததாலும் போதிய அளவு மழை வீழ்ச்சி கிடைக்காமலும் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக 25 சதவீதத்தால் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்வாக தற்போது இடைக்கிடையே மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் இருந்து நீரைக் கொண்டு செல்லும் சுரங்கப்பாதை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தேசியமின் கட்டமைப்பிற்கு 60 மெகா வாட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.

அத்துடன் கடந்த மாதங்களில் கனியோன் மின் உற்பத்தி நிலையத்தின் சுரங்கப்பாதையில் கோளாறு ஏற்பட்டால் அங்குள்ள இரண்டு டேபன்டயினர்கள் சேதமடைந்துள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .

இதற்காக தற்போது சுரங்கப்பாதையை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் மாறாக இது சீர்குலைக்கும் வேலை இல்லை எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...