1578038553 sajith premadasa opposition leader 5
செய்திகள்அரசியல்இலங்கை

கலப்பின எரிவாயு சிலிண்டர்களே வெடிப்புகளுக்கு காரணம் – சஜித்

Share

எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு இன்று பாராளுமன்ற்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணையை முன்னைடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இவ் வெடிப்புச் சம்பவங்கள் நாளாந்தம் எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வெடிப்பு சம்பவங்கள் அசாதாரணமானவை அல்ல. கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 18 லீற்றர் கலப்பின எரிவாயு சிலிண்டரை அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தியப் பின்னரே குறித்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இது அரசின் பாரிய இலாபமீட்டும் தந்திரம். இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டர்களில் பியூட்டேன் மற்றும் புரொப்பேன் வீதங்கள் பூர்த்தி செய்யப்படாமல் வாயுக் கலவை மாற்றப்பட்டு எடை குறைக்கப்பட்டமையே இவ்விபத்துச் சம்பவங்களுக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...