மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு
இலங்கைசெய்திகள்

மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு

Share

மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு

புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஜதலாவ, பன்விலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபரின் 25 வயது மனைவியுடன் சிறிது காலமாக தகராறு இருந்து வந்த நிலையில், இது குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் போது மனைவியின் பின்னால் குறித்த நபரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

மனைவி முறைப்பாடு செய்யும் போது மறைத்து வைத்திருந்த விஷப் போத்தலை எடுத்து குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு, பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு விஷப் போத்தலை பறித்து பின்னர் இந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பன்விலதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஒரு பணியிடத்தில் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் ஒரு பிள்ளையும் உள்ளது.

இருவருக்கும் இடையில் சில காலமாக தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், மனைவி புபுரஸ்ஸ பொலிஸில் இதற்கு முன்னர் 6 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் 7வது தடவை முறைப்பாடு செய்யும் போதே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...