tamilni 378 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திருமணமான புதுமணப் பெண்ணுக்கு அதிர்ச்சி

Share

கொழும்பில் திருமணமான புதுமணப் பெண்ணுக்கு அதிர்ச்சி

கொழும்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நாளில் கணவர் கொடுத்த 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடிச் சென்றதாக 22 வயது பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு 12 ஸ்ரீமன் பண்டாரநாயக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், 23 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்திற்கு மேலதிகமாக, 60 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாகவும் அவரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி தனது திருமணம் நடைபெற்ற நிலையில் தங்க நகைகளை அலுமாரியில் வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதில் கணவரால் பரிசாக கொடுக்கப்பட்ட சுமார் 23 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது சொந்த தங்கப் நகைகள் அனைத்தும் பெட்டிகளில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் தங்கம் வைத்திருந்த அலுமாரியின் சாவியை ஒரு பையில் வைத்து ஒரு இடத்தில் வைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் பணிப்பெண்ணும் தந்தையும் மட்டுமே இருந்ததாகவும், சில மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததாகவும், பையில் இருந்த சாவியை தேடி பார்த்தபோது சரியான இடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை அலுமாரியின் பூட்டை உடைத்து பார்த்தபோது, ​​அங்கு தங்கப் பொருட்கள் எதுவும் இல்லை என அவர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...