24 1
இலங்கைசெய்திகள்

பாடசாலை கல்வியை இழந்த மாணவனை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரிகள்

Share

பாடசாலை கல்வியை இழந்த மாணவனை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரிகள்

மாத்தறையில் ஐந்தாம் வகுப்பில் பாடசாலை கல்வியை நிறுத்திய மாணவன் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட செயல் நெகிழ வைத்துள்ளது.

மிதிகம பொலிஸாரின் தலையீட்டினால் மாணவனின் பாடசாலைக் கனவு மீண்டும் நிஜமாகியுள்ளது. மூன்று பிள்ளைகளை கொண்ட பிரியந்த மற்றும் மனைவி ரசிகா லக்ஷானி ஆகியோரின் இரண்டாவது மகன் மலிந்துவுக்கு மீண்டும் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாத்தறை, மிதிகமவில் வசிக்கும் மலிந்துவின் குடும்பம், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிரந்தர வீடு கூட இல்லாததால் மிகவும் அவல நிலைக்கு தள்ளப்பட்டது.

மலிந்துவின் பாடசாலை கல்வி ஐந்தாம் வகுப்போடு நின்று போனது, பொருளாதார நெருக்கடி காரணமாக மலிந்துவை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலும் மலிந்துவின் பெற்றோர் அவரை பாடசாலையில் சேர்க்க முயன்றனர். அந்த முயற்சி வெற்றியடைந்தாலும், வகுப்பில் சேர்ப்பதற்கு ஏனைய செலவுகளுக்கு பணம் இல்லாததால் அந்த வாய்ப்பு மீண்டும் தவறிவிட்டது.

வேறு சில காரணங்களுக்காக மலிந்து தனது பெற்றோருடன் மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, ​​மலிந்து பாடசாலைக்கு செல்லாதது தொடர்பில் பொலிஸார் அவர்களிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலை செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி அசோக அபிவர்தன முன்னெடுத்து சிறுவனை பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமான செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...