வீடு வாங்க காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி
இலங்கைசெய்திகள்

வீடு வாங்க காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி

Share

வீடு வாங்க காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தருவதாகவும், காணி வாங்கி தருவதாகவும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு தொடர்புடைய தனியார் நிறுவனத்தை நடத்தும் இடத்தை வாடிக்கையாளர்கள் குழு ஒன்றினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மிகவும் சலுகை விலையில் புதிய வீடு கட்டித் தருவதாகவும், புதிய காணி வாங்க வாய்ப்பு தருவதாகவும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.

இவ்வாறு விற்கப்படும் காணி மற்றும் வீடுகள் ஒரு கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்திற்கு புதிய வீடு கட்டுவதற்கும் புதிய காணி வாங்குவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முன்பணமாக 10, 20, 35, 48, 50 லட்சம் போன்ற வடிவங்களில் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் மீதித் தொகையை செலுத்தி உரிய பரிவர்த்தனையை நிறைவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்ததுடன், அதற்கமைய, எஞ்சிய பணம் அனைத்தும் கடந்த ஜூன் 22ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பத்து நாட்கள் கடந்தும் எதிர்பார்த்த காணியோ, வீடோ கிடைக்காததால் மாலம்பே பகுதியில் நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தின் முன் 50 வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் வந்த நேரத்தில், அலுவலகத்தில் அனைத்து பொருட்களையும் அகற்றியிருப்பதை அவதானித்தனர். இதுதவிர, இந்த கட்டடம் வாடகை அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்ற அறிவிப்பும், வாசலில் வைக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நிறுவனம் பல போலி பெயர்களில் இயங்கி வருவதும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பல பெயர்களில் செயற்பட்டமை தெரியவந்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...