25 67b32e3d0391c
இலங்கைசெய்திகள்

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஏற்படப்போகும் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஏற்படப்போகும் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நிலவும் வெப்பநிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்திலும் வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஏற்படப்போகும் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Hot Weather Alert In Sri Lanka

முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.

இது வெளிவேலைகளில் ஈடுபடும் நபர்களை கடுமையாக பாதிக்கின்றது.

எனவே, வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில், வெப்பமான வானிலை காரணமாக பல பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே, வெப்பமான வானிலை குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...