tamilni 21 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மாணவிகளின் நெகிழ்ச்சியான செயல்

Share

இலங்கையில் மாணவிகளின் நெகிழ்ச்சியான செயல்

அனுராதபுரத்தில் இரண்டு மாணவிகளின் நேர்மையான செயற்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மீகலேவ நகர வீதியொன்றில் கிடந்த பெருந்தொகை பெறுமதியான தங்க நகைகளை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி 500,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருள் மற்றும் பணப்பை ஒன்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீகலேவ மஹாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவிகள் இருவரே இந்த செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் கொண்டு வந்த தங்க பொருட்கள் மற்றும் பணப்பையை உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சமூக விழுமியங்கள் அழிந்து வரும் சமூகத்தில் இவ்வாறான செயலை செய்த இரண்டு மாணவிகளின் நேர்மையை பாராட்டிய பொலிஸார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் நற்செயல்களை பாராட்டி அவர்களை கௌரவப்படுத்துமாறு பொலிஸார் கடிதம் மூலம் அவர்கள் கற்கும் பாடசாலையின் அதிபருக்கு தெரிவித்துள்ளனர் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...