24 66030d5d7a6dc
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

Share

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

இலங்கைக்கு கடந்த பெப்ரவரி மாதம் பெருமளவான வெளிநாட்டு பயணிகளும் , விமானங்களும் வருகை தந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்தார்.

இதன்படி பெப்ரவரி மாதம், இலங்கைக்கு 1,602,417 சர்வதேச பயணிகளும், 8,946 சர்வதேச விமானங்களும் வருகை தந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில்
கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் சர்வதேச பயணிகளின் அதிகரிப்பு சுமாராக 40.39% ஆகவும், சர்வதேச விமானங்களின் அதிகரிப்பு சுமாராக 30.77% ஆகவும் உள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விமானம் மூலம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், 2023 இல் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளைவிட இந்த வருடம் பெப்ரவரி மாதம் 104.65% அதிகரிப்பைக் காட்டுகிறது.

மேலும் பெப்ரவரி மாத இறுதி வரை விமானம் மூலம் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 425,532 ஆகும்.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...