24 66030d5d7a6dc
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

Share

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

இலங்கைக்கு கடந்த பெப்ரவரி மாதம் பெருமளவான வெளிநாட்டு பயணிகளும் , விமானங்களும் வருகை தந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்தார்.

இதன்படி பெப்ரவரி மாதம், இலங்கைக்கு 1,602,417 சர்வதேச பயணிகளும், 8,946 சர்வதேச விமானங்களும் வருகை தந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில்
கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் சர்வதேச பயணிகளின் அதிகரிப்பு சுமாராக 40.39% ஆகவும், சர்வதேச விமானங்களின் அதிகரிப்பு சுமாராக 30.77% ஆகவும் உள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விமானம் மூலம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், 2023 இல் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளைவிட இந்த வருடம் பெப்ரவரி மாதம் 104.65% அதிகரிப்பைக் காட்டுகிறது.

மேலும் பெப்ரவரி மாத இறுதி வரை விமானம் மூலம் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 425,532 ஆகும்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...