இலங்கைசெய்திகள்

அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

Share
7 12
Share

பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விடவும் கூடுதல் விலைக் நெல் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு வழங்கும் உத்தரவாத விலையை விடவும் ஐந்து ரூபா கூடுதலாக வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

கூடுதல் விலைக்கு தனியாருக்கு தாம் நெல்லை விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விடவும் 5-6 ரூபா கூடுதலாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதாகவும் அதனால் அவர்களுக்கு நெல்லை விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உத்தரவாத விலையை ஒரு விவசாயிடம் இருந்து அதிகபட்சமாக ஐயாயிரம் கிலோ கிராம் எடையுடைய நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்வனவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் ஐநூறு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...