17
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு

Share

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, இன்று (01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath), கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழு ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பதற்காக குறித்த குழு ஒக்டோபர் இரண்டாம் திகதி முதல் நான்காம் திகதி வரை கொழும்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

இந்தநிலையில், இந்த சந்திப்பின் போது, நாட்டின் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெறும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அததோடு, கட்டமைப்பு தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறும் எனவும் அவர் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சர்வதேச நாணய பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...