rtjy 34 scaled
இலங்கைசெய்திகள்

ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் வருமானம்

Share

ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் வருமானம்

கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் ஏற்றுமதி வர்த்தகத்தினூடாக 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றின் ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக அதன் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் தெரிவிக்ககையில்,

‘‘கடந்த 5 வருடங்களைக் கருத்தில் கொண்டு, 2023ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பயிர்களின் ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் ஈட்டியுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூன் 2023 வரை 34,771 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, 86,680 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டமுடிந்தது.

மேலும், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போன்ற பயிர்கள் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், பேரீச்சம்பழம் ஏற்றுமதியின் மூலம் பெருமளவிலான அந்நியச் செலாவணியும் கிடைத்துள்ளது.” என உபுல் ரணவீர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....