23 13
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தள்ளுபடி

Share

தேசபந்து தென்னகோன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தள்ளுபடி

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொலிஸ் மா அதிபராக, செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) தள்ளுபடி செய்துள்ளது.

பெல்லன்வில தம்மரதன தேரர், வண.பேராசிரியர் அகலகட சிரிசுமண தேரர் மற்றும் பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல ஆகியோர் இந்த இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தலையீட்டு மனு, நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இடையீட்டு மனுவில் உள்ள உள்ளடக்கம் வழக்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...