2 3 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு

Share

யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு160,000/= தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடந்த மாதம் 12ஆம் திகதி நல்லூர் சகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் யாழ் (Jaffna) கொக்குவில் (Kokkuvil) பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டு குறித்த வெதுப்பகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த மாதம் 24ஆம் திகதி அன்று தாக்கல் செய்யப்பட்டன.

இதனடிப்படையில், வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தினை மூடி சீல் வைக்குமாறும், மற்றைய வெதுப்பகத்தினை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த வெதுப்பகமானது பா. சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டதுடன் வழக்கினை இன்றைய தினத்திற்கு (03) ஒத்திவைக்கப்பட்டது.

அந்தவகையில், இன்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தலா 80,000 ரூபாய் தண்டம் அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் வெதுப்பகங்களை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...