15 10
இலங்கைசெய்திகள்

கருத்தடை மாத்திரை விநியோகம் : வெளியான குற்றச்சாட்டு

Share

கருத்தடை மாத்திரை விநியோகம் : வெளியான குற்றச்சாட்ட

கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளை சுகாதார வழங்குநர்கள் தெரிவிப்பதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.

“சில சுகாதார வல்லுநர்கள் மாத்திரைகளின் (பிறப்பு கட்டுப்பாடு) சில பாதகமான விளைவுகளைப் பற்றி பெண்களுக்கு கூறுவதில்லை மற்றும் அது தொடர்பான கேள்விகளைத் தவிர்ப்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்” என்று நெதர்லாந்தில் (Netherlands) உள்ள லைடன் பல்கலைக்கழகத்தின் நவீன தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் நீரா விக்கிரமசிங்க (Nira Wickramasinghe) நேற்று (7) இடம்பெற்ற நிகழ்வில் குற்றம் சாட்டினார்.

மேலும், திருமணமாகாத தாய்மார்கள் போன்ற அனைத்து சமூக-கலாச்சார பின்னணியில் உள்ள தாய்மார்களையும் ஏற்றுக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவச்சிகள் பயிற்சி பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவச்சிகள் திருமணமாகாத தாய்மார்கள் போன்ற சில பெண்களை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுக்கு பயிற்சி தேவை என்பதை நாங்கள் கண்டோம்” என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆலோசகர் வைத்தியர் சுசி பெரேரா (Dr. Susie Perera)கூறினார்.

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண அந்தஸ்தின் தேவையை  இலங்கை அரசாங்கம் இப்போது இரத்து செய்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...