rtjy 109 scaled
இலங்கைசெய்திகள்

வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையாற்ற அனுமதி

Share

வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையாற்ற அனுமதி

விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

60 வயதை பூர்த்தி செய்த விசேட வைத்திய நிபுணர்களை ஓய்வுறுத்துமாறு அமைச்சரவை கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி 176 விசேட வைத்திய நிபுணர்கள் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிதிபதி நிஷங்க பந்துல கருணாரட்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர் மரிக்கார் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.

இதனை தொடர்ந்து விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...