2 4 scaled
இலங்கைசெய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவன தலைவர்கள்

Share

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவன தலைவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அடுத்த வாரம் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள், உள்ளுர் கண்காணிப்பு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக நாளை மறுதினம் (3) சனிக்கிழமை அனைத்து தேர்தல் அதிகாரிகள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் ராஜகிரிய தேர்தல் செயலாளர் அலுவலகத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.

தேர்தலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து பாதுகாப்பு திணைக்கள தலைவர்களுடனும் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...