4 4
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைப்பு – படையினரை ஏற்றிவந்த பஸ் மக்களால் தீயிட்டு எரிப்பு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை இல்ல வீதியை இன்று மாலை சுற்றிவளைத்த மக்கள் நள்ளிரவைத் தாண்டியும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும், அரசின் தவறான நிர்வாகத்துக்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

பொலிஸாரின் தடையைத் தகர்த்தெறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டனர்.

இதன்போது கொதிப்படைந்த மக்கள், படையினரை ஏற்றி வந்த பஸ் ஒன்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர்.

போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மேலதிகமாகப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதேவேளை, பொலிஸார் மற்றும் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அவர்களுள் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குகின்றார்.

இலங்கையை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகள் இப்படியான மக்களின் எதிர்ப்பை தமது வீடுகளுக்கு அருகில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...