tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

பணத்தினை வீணடிக்கும் சுதந்திர தினம்

Share

பணத்தினை வீணடிக்கும் சுதந்திர தினம்

நாட்டில் சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாது அல்லல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டதினை கண்டிக்கும் வகையில் அவர் முகநூலில் பதிவொன்றினையிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு,

76 ஆவது சுதந்திர தினம் எங்களுக்கு உண்மையான சுதந்திரமா? நாட்டில் 70 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது மூன்று வேளை சாப்பாட்டைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது அல்லல்படுகின்றனர்.

சுதந்திர தினத்தில் வானத்தில் குத்துக்கரணம் அடிப்பதனால் மக்களின் பசியை போக்கிவிட முடியாது. அதன் மூலம் நாம் சுதந்திரத்தினை மறந்துவிட வேண்டும் என்று கூறவில்லை. மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் தேடிக்கொண்ட பணத்தினை வெறும் வேடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றே நான் குறிப்பிடுகின்றேன்.

எவ்வித ஆட்டமும் பாட்டமும் இன்றி அழகாக இதனை கொண்டாட முடியும். இவ்வாறு பணத்தினை வீணடிக்கும் சுதந்திர தினத்தினை நான் புறக்கணிக்கின்றேன் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...