இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

Share
7 1
Share

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

சட்டவிரோதமான உடலுக்கு தீங்கு விளைவிக்கும் க்ரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகத்தில் புழக்கத்தில் விடப்படுவதால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயது, பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல், சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்டுப்பாடற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவதால், சுகாதார சிக்கல்கள் பதிவாகும் அபாயமும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கமைய, அழகிற்காக பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்களில் அதிக செறிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...