ரணில் ஹரின் மனுஷ
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு ஹரின், மனுஷவும் ஆதரவு! – பறந்தது கடிதம்

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

நெருக்கடியான நிலையில் நாட்டைப் பொறுப்பேற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னிலையானமைக்காக ஆதரவு வழங்கவுள்ளதாக அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஸ்தாபிக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கத் தாம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்பட நடவடிக்கை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனைத்துக் கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும் பட்சத்தில் அமைச்சின் பொறுப்புக்களை உரிய வகையில் நிறைவேற்றவுள்ளதுடன், அமைச்சர்களுக்குக் கிடைக்கப்பெறும் வரப்பிரசாதங்கள் எவையையும் ஏற்கப்போவதில்லை எனவும், அவற்றை நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒதுக்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...