29 5
இலங்கைசெய்திகள்

30 கோடி கேட்டதில் சிக்குவார்களா தேசபந்து மற்றும் டிரான் : நீதிமன்ற வாயிலில் வைத்து அம்பலமான இரகசியம்

Share

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர், பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான ஹரக் கட்டாவிடம் 30 கோடி ரூபா பணம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஹரக் கட்டா, வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறிச் செல்லும் போது, ஊடகங்களைப் பார்த்து மேற்கூறிய கருத்தை சொல்லிச் சென்றுள்ளார்.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு 30 கோடி ரூபா பணத்தினைக் கொடுக்காத காரணத்தினால் தான் தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹரக் கட்டா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணத்தினைக் கொடுக்காத காரணத்தினால், கோடி ரூபா செலவிட்டு தன்னை தடுத்து வைத்திருப்பதாகவும் ஹரக் கட்டா குறிப்பிட்டார்.

தங்காலையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு மாதத்திற்கு 10 மில்லியன் ரூபா செலவாகும் என்றும் ஹரக் கட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியில் சொல்ல வேண்டிய பல விடயங்கள் இன்னும் உள்ளன. அவற்றை எல்லாம் விரைவில் நான் வெளிப்படுத்துவேன் என்றும் ஹரக் கட்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை விடுவிப்பதற்கு பேரம் பேசப்பட்டிருக்கலாம் என்றும் அது தொடர்பிலேயே ஹரக் கட்டா இன்று இவ்வாறு கருத்தினை வெளியிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...