13 6
இலங்கைசெய்திகள்

நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்குவதில் ஏன் தாமதம் : நாமல் கேள்வி

Share

தாமதமானாலும் கூட நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தாமதமானாலும் நெல்லுக்கான நிர்ணய விலையை தற்போதைய அரசாங்கம் வழங்கியிருப்பது தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இருப்பினும், இது நியாமான விலை அல்ல காரணம் , அன்று அப்போது 120 ரூபாய்க்கு நெல் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதமாகியும் இதே விலை நிர்ணயம் ஏற்றதல்ல.

கடந்த காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலையை விவசாயிகளுக்கு சரியாக வழங்க முடியும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனால், இன்று அந்த விவசாயிகளை மறந்துவிட்டு இன்று அவர்களின் செலவுகளை நெல்லில் சேர்த்து உள்ளீர்கள் பரவாயில்லை.

விவசாயிகளின் 20 மற்றும் 30 வீதம் நெல் விற்பனையான பிறகு நீங்கள் நிர்ணய விலையை வெளியிட காரணம் என்ன ? இதை கேட்டால், நாங்கள் செய்ததை சரி செய்ய காலம் வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் எதிர் கட்சியில் இருக்கும் போது உங்களால் கேள்விக்கேட்க முடிகின்றது இருப்பினும் ஆளும் கட்சியான பிறகு ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை” என அவர் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...