3 35
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் தீவிர தாக்குதல்! ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் பலி

Share

ஹமாஸின் காசா தலைவர் முகமது சின்வாரை தமது இராணுவம் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அவர் ஹமாஸின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவரும், அந்தக் குழுவின் மறைந்த தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரருமாவார் என நெதன்யாகு கூறியுள்ளார்.

மே 13 அன்று காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையின் முன்னாலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் முகமது சின்வார் இலக்குவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள ஹமாஸின் “நிலத்தடி உள்கட்டமைப்பை” அழித்ததாகக் கூறியுள்ளது.

எனினும், சின்வாரின் மரணத்தை ஹமாஸ் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

2023 ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யஹ்யா சின்வார், கடந்த அக்டோபரில் இஸ்ரேலிய துருப்புக்களால் கொல்லப்பட்டார்.

600 நாட்களுக்கு முன்பு ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது,

இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதன் பின்னர் காசாவில் குறைந்தது 54,084 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...