ஹக்கீம் ரிஷாத்
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவின் மாநாட்டைக் ஹக்கீம், ரிஷாத் கட்சிகளும் புறக்கணிப்பு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துள்ளது.

நேற்றிரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாகவே இந்த உயர்பீட கூட்டம் இடம்பெற்றது எனக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசுக்குச் சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த போதும் இந்த அரசு இது தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு தன்னுடைய பிரச்சினைகளை இந்தச் சந்தர்ப்பத்தில் மூடிமறைத்துக்கொள்வதற்காகவே இந்தச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி கலந்துகொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில்...

world 76
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசின் இரகசியங்களை வைத்து கோடிக் கணக்கில் லாபம்?

ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளிலும், குறிப்பாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகம மாணவன் மரணம்: மாரடைப்பால் நிகழ்ந்ததாகப் பிரேத பரிசோதனையில் உறுதி!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது உயிரிழந்த 19...

world 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் சோகம்: பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற மாணவி விபத்தில் பலி!

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (ஏப்ரல் 10, 2026) நண்பகல்...