ஹஜ் யாத்திரிகர்களை
இலங்கைசெய்திகள்

இம்முறை ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பாமல் இருக்கத் தீர்மானம்!

Share

இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து யாத்திரிகர்களை மக்காவுக்கு அனுப்பாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாத்திரிகர்களை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என அமைச்சில் நடைபெற்ற பேச்சின்போது பிரதான முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இம்முறை யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் நேற்று சவூதி அரசுக்கு அறிவிக்கப்பட்டது எனத் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...