25 6844629948d61
இலங்கைசெய்திகள்

இலங்கையை ஆட்டிப்படைக்கும் கொலைக்கலாசாரமும் குற்றச்செயல்களும்.. நாமல் வெளியிட்டுள்ள தகவல்

Share

ஜனவரி முதல் பகல் நேர துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகளில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சர்ச்சைக்குரிய பொருட்களைக் கொண்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் ஜனவரி மாதம் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் பொறுப்பேற்க மறுக்கிறது. நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு கைதி வெசாக் பண்டிகையின் போது ஜனாதிபதியின் பொது மன்னிப்புடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், ஜனாதிபதி ஊடகம் இப்போது அதை மறுக்கிறது. கைதி எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பது குறித்து சிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

சிறை அதிகாரிகள் தாங்களாகவே செயல்பட்டார்கள் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இன்றைய சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்.

நல்லாட்சி மற்றும் வலுவான தலைமையைக் கேட்டு ஒவ்வொரு தருணத்திலும் எதிர்ப்புத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இன்று, வெறும் ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாட்டின் மீதான தனது பிடியை இழந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 684c110644e76
இலங்கைசெய்திகள்

கிழித்தெறியப்பட்ட பௌத்த தோரண பதாதைகள்! விளக்கமளித்த பெண்

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது....

images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு...

25 684befed3eedb
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ரைசிங் லயன்! ஈரானை உலுக்கிய தாக்குதலால் அணு ஆயுத விளிம்பில் மத்திய கிழக்கு

அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள், உயர் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இராணுவ...

images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக்...