6 4
இலங்கைசெய்திகள்

இணையத்தில் பரவியுள்ள போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள்

Share

இணையத்தில் பரவியுள்ள போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள்

நாடளாவிய ரீதியில் 119 பேரை ஏமாற்றி 41 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி செய்ததாகக் கூறப்படும் போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவொன்று இணையத்தில் பரவியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட போலி வேலை வாய்ப்பு முகவர்கள் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, நியூசிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த போலி வேலை முகவர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்து, தற்காலிக விசா தயாரித்து, இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச்சென்று, அவர்களை வழியில் விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த வருடம் இவ்வாறான 95 முறைப்பாடுகளும், இந்த வருடம் 45 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களில் சிலர் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் வசிப்பவர்கள் எனவும், திஸ்ஸமஹாராமய, கல்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் உள்ள போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவிற்கு எதிராக பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடி வேலை வாய்ப்பு முகவர்களாகக் காட்டிக் கொண்ட 83 பேர் கடந்த ஆண்டும், 24 பேர் இந்த வருடமும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...