tamilni 343 scaled
இலங்கைசெய்திகள்

தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடு

Share

தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடு

தன் பாலின சிவில் திருமணத்தை அனுமதிக்கும் பிரேரணைக்கு ஐரோப்பிய நாடான கிரேக்க நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏதென்ஸ் பாராளுமன்றம் இந்த முக்கிய பிரேரணைக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் நாடாக கிரீஸ் மாறியுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மொத்தம் 176 எம்.பி.க்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் 76 உறுப்பினர்கள் தொடர்புடைய சீர்திருத்தத்தை நிராகரித்தனர், இருவர் வாக்களிப்பில் இருந்து விலகினர் மற்றும் 46 பேர் ஆஜராகவில்லை. புதிய இந்த சட்டத்தால், தன் பாலின திருமணம் மட்டுமின்றி, இந்த பிரிவினர் பிள்ளைகளை தத்தெடுக்கவும் முடியும்.

இது ஒரு வரலாற்று தருணம். எப்போது சட்டமாகும் என்று எம்மில் பலருக்கு உறுதியாக தெரியவில்லை என சமூக செயற்பாட்டாளர் Stella Belia தெரிவித்துள்ளார். ஏதென்ஸ் பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக ஏற்கனவே 36 நாடுகளில் தன்பாலின திருமணம் சட்டத்திற்கு உட்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள வரிசையில் கிரேக்கமும் இணைந்துள்ளது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சியான மைய-வலது புதிய ஜனநாயகக் கட்சி எதிராக வாக்களித்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...