24 66f8ce3f915ac
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தம் தொடர்பில் அநுரவின் தீர்மானம்

Share

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தம் தொடர்பில் அநுரவின் தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30.09.2024) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கும் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

குறித்த தீர்மானமானது, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட 07 பேர் கொண்ட குழு முன்வைத்த பரிந்துரையில் கீழ் எடுக்கப்பட்டது.

எனினும், பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விடயம் தொடர்பில் அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன் போது, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...