இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

rtjy 41 scaled
Share

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட 50,000 டொலர்கள் விருது பணத்தை சிறிலங்கா கிரிக்கெட் சபை ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல மைதானம் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி, 2023 ஆசியக் கிண்ணத்தின் போது பணிபுரிந்த கொழும்பு ஆர் பிரேமதாச மைதான ஊழியர்களில் 138 பேரின் (நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்) முயற்சிகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டதுடன், கண்டி மைதான ஊழியர்களில் 115 உறுப்பினர்கள் வெகுமதியை எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்கவுள்ளடாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு மைதானங்களின் பணியாளர்களும் போட்டியின் போது பயிற்சி வசதிகள், வெளியக ஆடுகளங்கள், மைதானத்தை மூடுதல், வெளிக்கொணர்தல் மற்றும் தொடர்புடைய சேவைகளை உறுதிசெய்து, மோசமான வானிலை இருந்தபோதிலும், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான சிறப்பான சேவையை செய்துள்ளனர்.

இந்த வெகுமதிகள் ஆசிய கிரிக்கெட் சபை மற்றும் சிறிலங்கா கிரிக்கட் ஆகியவற்றால் கூட்டாக வழங்கியுள்ளதோடு வெகுமதிகளில் ஒவ்வொரு நிறுவனமும் தலா 25,000 டொலர்களை பங்களிப்பான வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...