4 25
இலங்கைசெய்திகள்

யாழில் அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு!

Share

யாழில் அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு!

யாழ்.மாவட்டத்தில் (Jaffna )பிறப்பு, இறப்பு, மற்றும் விவாக பதிவாளர் (தமிழ்மொழி) பதவியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு இன்றைய தினம் (13) யாழ் மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கோப்பாய், கரவெட்டி பிரிவுகளுக்கான தமிழ்மொழி மூல பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப்பதிவாளர் பதவிக்கான வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம்- 2415) 13-12-2024ம் திகதி பிரசுரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 17-01-2025 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இறுதித் திகதியானது 17-03-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான வர்தமானி அறிவித்தல் 14-02-2025ம் திகதி வெளியிடப்படும் என பதிவாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...