4 35
இலங்கைசெய்திகள்

மகிந்த மற்றும் ரணிலுக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்கள்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Share

மகிந்த மற்றும் ரணிலுக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்கள்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக வாகனங்களை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டின் ஜனாதிபதிகள் உரிமைச் சட்டமானது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்ற சலுகைகளையே வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

2010ஆம் ஆண்டு மே மாதத்தில், அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, அமைச்சரவை அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு மூன்று வாகனங்களையே வைத்திருக்கும் உரிமை உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், திணைக்களத்தின் தகவல்படி, மகிந்த ராஜபக்ச, தாம் பயன்படுத்திய 16 வாகனங்களில் 8 வாகனங்களை ஏற்கனவே திருப்பி அனுப்பியுள்ளார். அதேசமயம் தற்போது விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...