5 34
இலங்கைசெய்திகள்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Share

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

மாத்தறை, தங்காலையில், நேற்று (19.10.2024) இடம்பெற்ற பிரசார நிகழ்வில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது மற்றும் பின்தங்கிய மற்றும விசேட தேவைக்கொண்ட சமூகங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்தும் இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவு கவனம் செலுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் வரவு செலவுத் திட்டத்தை விரைவாக சமர்ப்பிப்பது பொருத்தமானதல்ல என முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனால் எதிர்வரும் வருடம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...